பட்டாசு வெடித்துதான கொண்டாட வேண்டுமா?


தீபாவளி பண்டிகை என்பது தீப ஒளிப் தபண்டிகையே ஆகும். நமக்குள் இருக்கும் அசுர குணங்களும், கொடிய செயல் களும் முற்றிலும் நீங்கி கொண்டாடும் பண்டிகை நாளே தீபாவளி பண்டிகை எனும் தீப ஒளித் திருநாள் ஆகும். இதுவே மிகப்பெரிய அறிஞர்களின், ஞானிகளின் கருத்துமாகும்.


பட்டாசு வெடித்துக் கொண்டாடும் பண்டிகை அல்ல என்பதை நாம் தெரியாதுநன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.  பட்டாசு வெடிப்பதனால் இயற்கைக்கும், மனிதனுக்கும் பல வழிகளிலும் தீமைகள் ஏற்படுகின்றன. 


அத்தீமைகள் பெரிய அளவில் ஒரு தேசத்தையே பாதிக்கின்றது. மலைகள், காடுகள் மற்றும் புல்வெளிகள் உள்ளிட்ட இயற்கை சுற்றுச்சூழல்கள், வெடிபொருட்கள் மூலம் வெளியேறும் கரும்புகையால் மாசுபடுவதுடன் வெப்பமும் அதிகரித்து விடுகின்றது.


தீபாவளி அன்று சாலைகளில் கடும் உற்சாகத்துடன் பட்டாசுகளை வெடிப்பதால், வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறான இன்னல்கள் ஏற்படுகின்றன.


பபட்டாசு வெடிப்பதால் காயம் அடைவோரில் 50 சதம் பேர் குழந்தைகளே. ஆகையால் நாம் பட்டாசு வெடிப்பதை உடனே கைவிட வேண்டும். இயற்கையை சிதைக்காமல், அழிக்காமல் நாம் தீபாவளி கொண்டாட பல வழிகள் உலகில் உள்ளன.


பட்டாசில் இருந்து எழும் சத்தத்தால் காது செவிடாவதைப் போல அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், தொண்டை, மூக்கு போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.


பட்டாசு புகையின் தாக்கம் உடனே தெரியாது. 4,5 நாள் கழித்துதான் அந்த தாக்கத்தை நாம் உணர முடியும். உலக நாடுகள் அனைத்திற்குமே சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது ஒரு சவாலான பணியாக இருந்தாலும் வெளிநாடுகள் இதை வெற்றிகரமாக சமாளித்து விடுகின்றன.


இந்தியாவால் இதை சமாளிக்க முடியும் என்றாலும் ஒரு போதும் முயற்சிப்பதில்லை. இந்தியாவில் 10 ல் ஒருவருக்கு காது கேளாமை கோளாறு உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


தீபாவளி சமயங்களில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளை வெடிக்கும்போது காது கேளாமை கோளாறு மேலும் அதிகமாகும். காது செவிடான பிறகு மருத்துவ சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது. இதற்கு தனியாக சிகிச்சை என்று எதுவும் கிடையாது.


காது கேட்கும் மிஷின் பொருத்தினாலும் துல்லியமாக கேட்காது. பட்டாசில் இருந்து எழும் சத்தத்தால் காது செவிடாவதைப் போல அதில் இருந்து வெளியாகும் புகையால் கண், தொண்டை , மூக்கு போன்றவற்றில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். முதலில் இவை தலைவலியை கடுமையாக உண்டாக்கும் மூளையின் செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


இதயநோயாளிகள், நுரையீரல் கோளாறு உள்ளவர்கள் இப்புகையால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


                           


இதில் உள்ள வேதியியல் பொருள்கள் விளைவிக்கும் பல்வேறான தீங்குகள்:


தாமிரம்: சுவாசக்குழாய் எரிச்சல்


கேட்மியம்: இரத்த சோகை மற்றும் சிறுநீரக பாதிப்பு


ஈயம்: நரம்பு மண்டலத்தை பாதிக்கும்


மெக்னிஷியம்: தூசி மற்றும் புகைகள் உலோக காய்ச்சலை ஏற்படுத்தும்


சோடியம்: தோல்வியாதி


துத்தநாகம்: வாந்தி ஏற்படும்


நைட்ரேட்: மன அமைதி பாதிக்கப்படும்


நைட்ரைட்: புத்தி பேதலித்து கோமா ஏற்படும்


பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாட பல வழிகள் உலகில் நம்மிடம் இருக்கையில் நமக்கு வரப்பிரசாதமான இயற்கையை கெடுத்துத் தான் தீபாவளி கொண்டாட வேண்டுமா?


பட்டாசு வெடித்துத்தான் கொண்டாட வேண்டுமா?


இதுபற்றி என்றாவது நாம் கொஞ்சம் யோசித்தது உண்டா ...?


யோசித்தது உண்டா ...? இயற்கையை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட மனிதர்களே .... ஒரு நிமிடம் சிந்திப்போம். பட்டாசு வெடிப்பதை தவிர்ப்போம்.


 


 


 


 


 


Popular posts
நினைவாற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தனியுரிமைக் கிளைகள் அமைக்க வாய்ப்பு! இந்தியன் இன்ஸ்டிட் யூட் ஆப் மைண்ட் டைனமிக்ஸ் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி நேர்காணல்!
Image
மூன்றாம் தலைமுறையின் தொழில் வளர்ச்சியில் மதுரை சையால் நிறுவனம்!
Image
'சைவ இறைச்சி தயார் சாப்பிட ரெடியா?
Image
அடுத்த 5 ஆண்டுகளில் 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டம்!
Image
வேளாண்மை, கல்வி, கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்தும் தமிழக பட்ஜெட்! தமிழ்நாடு அரசின் 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்-14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள இதில் தொழில் சார் பார்வையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன எனபதை பார்க்கலாம்.
Image